உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே கழிவுநீர் தொட்டியில் ஆண் பிணம் கிடந்தது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே தனியார் கார் கம்பெனி உள்ளது.
இதன் அருகில் ஊழியர்கள் தங்கும் அறையின்பகுதியில் கழிவுநீர் தொட்டிஉள்ளது. இந்த தொட்டியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணமாக கிடந்தார்.
இதை அங்குள்ளவர்கள் பார்த்து குருபரப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் முகமது சுபானுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் இது குறித்து குருபரப்பள்ளி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புமணிமற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கழிவுநீர் தொட்டியில் பிணமாக கிடந்தவர் யார்? அவர் எப்படி இறந்தார்? என குருபரப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.