உள்ளூர் செய்திகள்
திருமானூரில் லாரி மோதி டி.எஸ்.பி. பலியானார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் போலீஸ் நிலை யத்தில் சிறப்பு டி.எஸ்.பி யாக பணிபுரிந்து வந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி முத்து லெட்சுமி. இவர்களுக்கு நிவேதா(23) என்ற மகளும், விக்னேஷ்(19) என்ற மகனும் உள்ளனர்.
இந்த நிலையல் பாலசுப்பிரமணியன் நேற்று,இரவு பணியை முடித்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது அரியலூர் தஞ்சாவூர் & நெடுஞ்சாலையில் திருமானூர் சர்க்கரை ஆலை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த திருமானூர் போலீசார், பாலசுப்பிரமணின்உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக அரிய லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.