உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழா
கிருஷ்ணகிரி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயான கொள்ளை திருவிழா நேற்று நடந்தது. இந்த விழாவினையொட்டி காலை அம்மனுக்கு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.
பக்தர்கள் அலகு குத்தியும், உடலில் எலுமிச்சம் பழங்களை குத்திக் கொண்டும் ஊர்வலமாக சென்றனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் காளி வேடம் அணிந்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
பூசாரிகளிடம் பக்தர்கள் சாட்டையடின வாங்கி கொண்டனர். அலங்கரிக்கப்பட்ட தேரில் பூத வாகனத்தில் அமர்ந்து அம்மன் மயான கொள்ளைக்கு புறப்பட்டு சென்றார். இந்த திருவிழாவில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
விழாவில்,கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன் தலைமையில் 50-க்கும் மேற்பட் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில், பொதுமக்கள் தண்ணீர், நீர்மோர், அன்னதானம் போன்றவற்றை பக்தர்களுக்கு வழங்கினர்கள்.