உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ஈரோடு மாநகராட்சி மேயர், துணை மேயர் தேர்தல் நாளை நடக்கிறது

Published On 2022-03-03 15:13 IST   |   Update On 2022-03-03 15:13:00 IST
ஈரோடு மாநகராட்சி மேயர், துணை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தலும், 4 நகராட்சிகளின் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தலும், 42 பேரூராட்சிகளில் தலைவர், துணைத்தலைவர் களுக்கான மறைமுக தேர்தலும் நாளை நடைபெறுகிறது.
ஈரோடு:

ஈரோடு மாநகராட்சி மேயர், துணை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தலும், 4 நகராட்சிகளின் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தலும், 42 பேரூராட்சிகளில் தலைவர், துணைத்தலைவர் களுக்கான மறைமுக தேர்தலும் நாளை நடைபெறுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சி, கோபி, பவானி, சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகள், மற்றும் 42 பேரூராட்சிகளில் 792 வார்டுகளுக்கு தேர்தல் நடந்தது.

இதில் 2 பேரூராட்சிகளில் வேட்பாளர்கள் இறந்ததால் அந்த 2 வார்டுகளில் மட்டும் தேர்தல் நடைபெறவில்லை. மீதம் 790 வார்டுகளில் கவுன்சிலர்கள் தேர்ந் தெடுக்கப்பட்டு உள்ளனர். 

ஈரோடு மாநகராட்சியின் 60 வார்டுகளிலும் உறுப் பினர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர்.
 
இதைத்தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) ஈரோடு மாநகராட்சி மேயர், துணை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தலும், 4 நகராட்சிகளின் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தலும், 42 பேரூராட்சிகளில் தலைவர், துணைத்தலைவர் களுக்கான மறைமுக தேர்தலும் நாளை நடைபெறுகிறது.

இதற்காக மாநகராட்சி அலுவலகம், நகராட்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள் தயாராகி வருகின்றன. ஈரோடு மாநகராட்சியின் 60 வார்டுகளில் 30 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு 30 பெண்கள் உறுப்பினராக தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாநகராட்சி மேயர் பதவி பெண்கள் (பொது) பிரிவுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளதால் இந்த முறை மேயர் பதவியை பெண் வகிக்க போகிறார். ஈரோடு மாநகராட்சி தி.மு.க. கூட்டணி கைப்பற்றி உள்ளது.

மாநகராட்சியில் 43 வார்டுகளில் நேரடியாக தி.மு.க வெற்றி பெற்றுள்ளதால் தி.மு.க.வை சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் தான் மேயர் பதவி வகிக்க போவது உறுதியாகி விட்டது. 

மேயர் பதவிக்கு 4 பேர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஏற்கனவே ஈரோடு மேயர் பதவிக்கு போட்டியிடும் பட்டியல் அமைச்சர் முத்துசாமி மூலம் முதல்-அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேப்போல் துணை மேயர் பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் பலரது பெயர்களும் அடிபடுகிறது. ஆனால் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு துணை மேயர் பதவி வழங்கப்படுமா? என எதிர் பார்ப்பு நிலவி வருகிறது.

இதற்கிடையே மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நாளை காலை மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. உறுப்பி னர்கள் அனைவரும் காலை 9.30 மணிக்கு மாநகராட்சி கூட்ட அரங்கிற்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மற்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அதேப்போல் உறுப் பினர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. உறுப்பினர்களுக்கு பேனா, பென்சில், செல்போன் கூட்ட அரங்கிற்கு கொண்டு வர தடை விதிக்கப் பட்டுள்ளது. 

நாளை காலை 9.30 மணிக்கு ஈரோடு மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் மாநகராட்சி தேர்தல் நடத்தும் உதவி அலுவல ருமான சிவக்குமாரிடம் மனு தாக்கல் செய்வார்கள். அதில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் மனு தாக்கல் செய்தால் மேயருக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறும்.
 
இதில் உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்று மேயரை மறைமுகமாக தேர்ந்தெடுப்பார்கள். இதில் பெரும்பாலான  ஓட்டு பெறுபவர்கள் மேயராக தேர்ந்தெடுக்கப் படுவார்கள். இதேபோல் துணை மேயர் மறைமுகத்தேர்தல் மதியம் நடைபெறும்.

இதேபோல் 4 நகராட்சி தலைவருக்கான தேர்தல் நாளை காலை நடைபெறும், மதியம் துணை தலைவருக்கான தேர்தல் நடைபெறும். இதேபோல 42 பேரூராட்சிகளில் தலைவருக்கான தேர்தல் காலை நடைபெறும். மதியம் துணை தலைவருக்கான தேர்தல் நடைபெறும்.

Similar News