உள்ளூர் செய்திகள்
வேப்பமரத்தில் பொங்கி வடியும் பால்
வேளாங்கண்டி அருகே வேப்பமரத்தில் பொங்கி வடியும் பாலை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த வடக்குப்பொய்கைநல்லூர் சித்தர் கோவில் பகுதியை சேர்ந்தவர் மதியழகன்.
இவரது வீட்டின் அருகே உள்ள வேப்பமரத்தில் திடீரென பால் போன்ற திரவம் நுரையுடன் பொங்கி வழிந்து வருகிறது. இது இனிப்புச்சுவையுடன் உள்ளது.
இதனை கேள்விப்பட்ட சுற்றுப்பகுதி கிராமத்தை சார்ந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
இது குறித்து அப்பகுதி முதியவர்கள் கூறும் போது, 50 ஆண்டுகளுக்கு மேலான மரங்களில் பால் போன்ற திரவம் எப்போதாவது வடியும்.
ஆனால், 2 ஆண்டுகளே ஆன சிறிய மரத்தில் பால் வடிவது ஆச்சரியமாக உள்ளது என்றனர்.