உள்ளூர் செய்திகள்
சாத்தூர் பண்ணையில் வருகிற 15ந்தேதி ஆடுகள் ஏலம் நடக்கிறது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஆட்டுப்பண்ணையில் பராமரிக்கப்பட்டு, கழிவு செய்யப்பட்ட 41 கன்னி வெள்ளாடுகள், 19 வெம்பூர் செம்மறி ஆடுகள் ஆகமொத்தம் 60 ஆடுகள் வருகிற 15ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பகல் 12 மணியளவில் பொதுஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
இதற்கான ஏலத்தில் கலந்துகொள்ள விரும்பும் பொதுமக்கள் முன்தொகையாக ரூ.5 ஆயிரத்துக்கான வரைவோலையை தேசியமயமாக்கப்பட்ட வங்கிமூலம் பெற்று, வருகிற 14ந்தேதி மதியத்திற்குள் சாத்தூர் ஆட்டுப்பண்ணை துணைஇயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கவேண்டும்.
வங்கி வரைவோலையானது துணைஇயக்குநர், ஆட்டுப்பண்ணை, சாத்தூர் (ஞிமீஜீutஹ் ஞிவீக்ஷீமீநீtஷீக்ஷீ, கிபி, ஷிலீமீமீஜீ யீணீக்ஷீனீ, ஷிணீttuக்ஷீ) என்ற முகவரிக்கு எடுக்கப்பட வேண்டும். முன்தொகை வங்கி வரைவோலையாக மட்டுமே பெற்றுக்கொள்ளப்படும்.
இதுதொடர்பான விவரங்கள் தேவைப்படுவோர் சாத்தூர் ஆட்டுப்பண்ணை துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது 89407 98444 என்ற தொலைபேசி எண்ணிலோ அலுவலக நேரத்தில் தொடர்புகொள்ளலாம். ஏலம் தொடர்பான நிபந்தனைகள் மற்றும் விபரங்கள் சாத்தூர் ஆட்டுப்பண்ணை தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.
இந்த ஏலத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.