உள்ளூர் செய்திகள்
சாலை விபத்தில் கூலி தொழிலாளி பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே மோட்டர் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலியானார்.
கிருஷ்ணகிரி:
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டார் வட்டம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி(வயது 44). கூலி தொழிலாளி.
இவர் கடந்த மாதம் 28-ந்தேதி தனது மோட்டார் சைக்கிளில் பர்கூர் & ஜெகதேவி சாலையில் உள்ள அக்ர ஹாரம் பகுதியில் சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.