உள்ளூர் செய்திகள்
மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி சாவு
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார்.
தருமபுரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்துள்ள கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது35). இவர் தேங்காய் உரிக்கும் தொழிலாளி.
இந்த நிலையில் நேற்று அரசம்பட்டியில் தேங்காய் உரித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது ஓலைப்பட்டி கூட்டு ரோடு அருகே வந்த போது எதிரே வந்த பைக் எதிர்பாராதவிதமாக கோவிந்தராஜ் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த கோவிந்தராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை கோவிந்தராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து கல்லாவி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.