உள்ளூர் செய்திகள்
.

அரசு பள்ளி விடுதி சமையலர் தற்கொலை

Published On 2022-03-02 15:51 IST   |   Update On 2022-03-02 15:51:00 IST
கிருஷ்ணகிரி மகராஜ கடை அருகே அரசு பள்ளி விடுதி சமையலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜகடை அடுத்த சிந்தகம்பள்ளி கிராமத்தை சேர்ந்த முனிராஜ் (வயது35) என்பவர் ஊத்தங்கரை அரசு பள்ளி விடுதியில் சமையலராக, பணியாற்றி வந்தார். 
-
இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறில் இருவரும் பிரிந்து தனித்தனியாக வசித்து வந்தனர். இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட முனிராஜ், நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மகாராஜகடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News