உள்ளூர் செய்திகள்
குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர் அனைத்த காட்சி

குப்பை கிடங்கில் தீ விபத்து

Published On 2022-03-02 13:26 IST   |   Update On 2022-03-02 13:26:00 IST
பெருந்துறை அருகே காஞ்சிகோயில் பேரூராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.
பெருந்துறை:

பெருந்துறை அருகே காஞ்சிகோயில் பேரூராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.

பெருந்துறை அருகே காஞ்சிகோயில் பேரூராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு காஞ்சிக்கோவில்- சித்தோடு ரோட்டில் அமைந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று அந்த வழியாக சென்ற மர்ம நபர் சிலர் குப்பைகளுக்கு தீ வைத்துவிட்டு சென்றுவிட்டனர். 

இதனால் குப்பை கிடங்கில் பற்றிய தீ மளமளவென எரிய ஆரம்பித்தது. இதனை அணைக்க முடியாமல் தடுமாறிய காஞ்சிக்கோவில் பேரூராட்சி ஊழியர்கள் இது குறித்து பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

நிலைய அலுவலர் (பொறுப்பு) நாகேஸ்வரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சுமார் 6 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

Similar News