உள்ளூர் செய்திகள்
தற்கொலை

நிதி நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2022-03-01 16:39 IST   |   Update On 2022-03-01 16:39:00 IST
விருதுநகர் அருகே நிதி நிறுவன அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர்

விருதுநகர் வெல்லுரை சேர்ந்தவர் தங்கேஸ்வரன்(வயது 24). இவர் சிவகாசியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் பக்கத்து வீட்டை சேர்ந்த பெண்ணுடன் தங் கேஸ்வரனுக்கு பழக்கம் ஏற்பட்டது.

இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஆமத்தூர் போலீசில் புகாரும் செய்யப்பட்டது. இதற்கிடையில் கடந்த 24ந்தேதி தங்கேஸ்வரன் விஷம் குடித்து மயங்கினார். அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 

அங்கு தீவிர சிகிச்சைக்கு பின்னர் அவர் உயிர்பிழைத்தார். அதன்பிறகு மீண்டும் அவர் தற்கொலைக்கு முயன்றார். விருதுநகர் புதுக்கோட்டை பகுதியில் உள்ள கல்குவாரி தோட்டத்தில் தங்கேஸ்வரன் தூக்கில் தொங்கினார். 

அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தங்கேஸ்வரன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது தாயார் ஈஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News