உள்ளூர் செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மல்லி ராமகிருஷ்ணபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் கற்பகச்செல்வி(வயது 19). இவரும் கரைவளந்தான்பட்டியை சேர்ந்த வாலிபரும் காதலித்து வந்துள்ளனர்.தனது காதல் விவகாரத்தை கற்பகச்செல்வி தனது பெற்றோரிடம் தெரிவித் துள்ளார்.
இதையடுத்து அவரது தந்தை முருகன், முறைப்படி பெண் பார்க்க வரச்சொல்லுமாறும், பேசி முடிவெடுக்கலாம் என்று மகளிடம் கூறியுள்ளார். இதனால் மகிழ்ச்சியடைந்த கற்பகச்செல்வி காதலனிடம், குடும்பத்துடன் வந்து முறைப்படி பெண்பார்க்க வருமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து குறிப்பிட்ட நாளில் காதலன் வீட்டுக்கு வந்து பெண்பார்க்க வருவார் என்று கற்பகச்செல்வி மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தார். ஆனால் அன்று அவர்கள் வரவில்லை. இதனால் கற்பகச்செல்வி சோகமாக காணப்பட்டார்.
காதலன் தன்னை ஏமாற்றியதால் விரக்தியடைந்த கற்பகசெல்வி விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காதலன் பெண் பார்க்கவராமல் ஏமாற்றியதால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.