உள்ளூர் செய்திகள்
விவசாயிகள் ஆதார் விவரங்களை திட்ட வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வலியுறுத்தல்
விருதுநகர் மாவட்ட விவசாயிகள் ஆதார் விவரங்களை திட்ட வலைதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் என்று கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
--பி.எம். கிஷான் திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ6ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 80,150 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.
இதுவரை இந்த திட்டத்தில் சேர்ந்த தேதியை பொறுத்து விவசாயிகளுக்கு 10 தவணை வரை தொகைகள் வரப்பெற்றுள்ளது. தற்போது விவசாயிகள் 11வது தவணை (1.4.2022முதல்31.7.2022 வரை) தொகையை பெறுவதற்கு ஆதார் விவரங்களை சரிபார்ப்பு செய்வது அவசியம்.
ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைத்து விவசாயிகள் ஆதார் எண் விவரங்களை உள்ளீடு செய்து பி.எம். கிஷான் திட்ட வலைதளத்தில் ஓ.டி.பி. மூலம் சரிபார்க்கலாம். ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைக்காத விவசாயிகள் அருகிலுள்ள இ&சேவை மையங்களின் மூலம் பி.எம். கிஷான் திட்ட வலைதளத்தில் தங்களது ஆதார் எண் விவரங்களை உள்ளீடு செய்து தங்களது விரல் ரேகை பதிவு செய்து விவரங்களை சரிபார்க்கலாம்.
இதற்கு கட்டணமாக ரூ.15 பொது சேவை மையங்களுக்கு செலுத்தவேண்டும். இந்த இரு முறைகளில் ஏதேனும் ஒரு முறையில் பயனடைந்த விவசாயிகள் தங்கள் ஆதார் விவரங்களை உடனடியாக திட்ட வலைதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.