உள்ளூர் செய்திகள்
போச்சம்பள்ளியில் பிளஸ்-1 மாணவன் மாயம்
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே பிளஸ்&1 மாணவன் மாயம் மாயமாகி உள்ளார்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் ஹரிமனாத் (வயது16). இவர் அப்பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
இந்த நிலையில் ஹரிமனாத் கடந்த மாதம் 5-ந்தேதி அன்று மதியம் வீட்டை வீட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து மாணவனின் தந்தை சக்திவேல் போச்சம் பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி வழக்கு பதிவு செய்து மாயமான பள்ளி மாணவன் ஹரிமனாத்தை தேடி வருகிறார்.