உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி திருவிழா
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி விருவிழா நடைபெற்றது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மகா சிவாரத்திரி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி நேற்று காலை ஹோமவிதான புன்யாஹ வாசனம், துவாஜா ரோஹணம், கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகளுடன் கோயில் வளாகத்தில் கொடி ஏற்றப்பட்டது.
கோவில் திருப்பணி பணியாளர்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு அங்குரார்ப்பணம், முளைப்பாரி எடுத்தல், யாகசாலை பிரவேசம், அக்னிமுகம், மகா கணபதி ஹோமம், அஷ்ட திக்பாலகர் பரிவார பூஜையுடன் அம்மனுக்கு பொங்கல் வைக்கப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு பொங்கல் வைத்து படையலிட்டு வழிபட்டனர். இன்று (1ம் தேதி) மஹா சிவராத்திரியும், நாளை (2ம் தேதி) சூலம் போடுதல் நிகழ்ச்சியும், அம்மன் மயான சூறைக்கு புறப்படுதல் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.