உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

அரசு பள்ளியில் குடிபோதையில் தகராறு செய்த வாலிபர் கைது

Published On 2022-03-01 15:15 IST   |   Update On 2022-03-01 15:15:00 IST
சென்னிமலை அருகே அரசு பள்ளியில் குடிபோதையில் தகராறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னிமலை:

சென்னிமலை அருகே அரசு பள்ளியில் குடிபோதையில் தகராறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னிமலை அருகே அம்மாபாளையம் உள்ளது. இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி ஒரே வளாகத்தில் உள்ளது. இப்பள்ளியின் முன்பாக ஒரு வாலிபர் அப்பள்ளியில் பணி புரியும் ஆசிரியைகளிடம் குடிபோதையில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியை சென்னிமலை போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குடிபோதையில் இருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில் அவர் சென்னிமலையை அடுத்த கொமாரபாளையம் ஜெம் கார்டன் பகுதியை சேர்ந்த லோகநாதன் ( 27) என்பதும், குடிபோதையில் அந்தப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகளிடம் தகராறு செய்தது தெரியவந்தது. 

இதையடுத்து குடிபோதையில் இருந்த லோகநாதன் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். பின்னர் லோகநாதனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News