உள்ளூர் செய்திகள்
ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலில் 3 கிலோ கஞ்சா சிக்கியது
ஈரோடு வழியாக கேரளா செல்லும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலில் 3 கிலோ கஞ்சா சிக்கியது.
ஈரோடு:
ஈரோடு வழியாக கேரளா செல்லும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலில் 3 கிலோ கஞ்சா சிக்கியது.
ஜார்கண்ட் மாநிலம் தன் பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு ஈரோடு வழியாக எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் கஞ்சா கடத்தப்பட்டு வருவது தொடர் கதையாகி வருகிறது.
இதனால் ரெயில்வே போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு ரெயில் நிலைய நடைமேடைக்கு அதிகாலை ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து நின்றது.
ஈரோடு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரெயிலில் ஒவ்வொரு பெட்டியாக சோதனை செய்தனர். அப்போது ஒரு பெட்டியின் சீட் அடியில் ஒரு பை கேட்பாரற்று கிடந்தது.
சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பையை திறந்து சோதனை செய்தனர். அப்போது அதில் 3 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து அங்குள்ள பயணிகளிடம் கேட்டபோது அது தங்களுடையது இல்லை என்று கூறிவிட்டனர்.
விசாரணையில் போலீஸ் வருவதை கண்டு கஞ்சா கடத்தி வந்த நபர் பையை அங்கேயே போட்டு விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா கோவையில் உள்ள போதை தடுப்புபிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.