உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி அருகே குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அடுத்த செம்படமுத்தூர் காலனியை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் சரத்குமார் (வயது 26).
இந்த நிலையில் இவருக்கும், மனைவிக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு வந்தது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சரத்குமார், வீட்டில் வைத்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.