உள்ளூர் செய்திகள்
தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த புள்ளிமான் மீட்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த புள்ளிமான் மீட்கப்பட்டது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே உள்ளது பூசாரிப்பட்டி. இங்கு அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து புள்ளிமான் ஒன்று நேற்று மாலை தண்ணீர் தேடி ஊருக்குள் வந்தது.
அப்போது புள்ளி மானை கவனித்த நாய்கள் அதை விரட்டியது. இதில் புள்ளி மான் காயம் அடைந்தது. இதை கவனித்த பொதுமக்கள் நாய்களிடம் இருந்து புள்ளிமானை மீட்டனர்.
பின்னர் அவர்கள் கிருஷ்ணகிரி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் வனத்துறையினரும், கால்நடை மருத்துவர்களும் வந்தனர். பின்னர் காயம் அடைந்த புள்ளி மானுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் புள்ளிமான் வனப்பகுதியில் விடப்பட்டது.