உள்ளூர் செய்திகள்
தொழிலாளியை தாக்கி செல்போன், பணம் பறிப்பு
வத்திராயிருப்பு அருகே தொழிலாளியை தாக்கி செல்போன், பணம் பறித்த 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள ராமசாமியாபுரத்தை சேர்ந்தவர் சின்னஒட்டக்காரன்(வயது 52). தேங்காய் நார் உரிக்கும் தொழிலாளி. இவர் சம்பள பணத்துடன் சாலையில் நடந்து சென்றார்.
அப்போது அதே ஊரை சேர்ந்த தினேஷ்குமார், விக்னேஷ் ஆகியோர் வழிமறித்து பணத்தை கேட்டு மிரட்டினர். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த அரிவாள் மற்றும் கம்பால் தாக்கினர்.
இதில் சின்னஒட்டக்காரன் காயம் அடைந்தார். இதனை தொடர்ந்து அவர் வைத்திருந்த செல்போன் மற்றும் ரூ.11 ஆயிரத்தை பறித்துக்கொண்டு 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து கூமாபட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமார், விக்னேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.