உள்ளூர் செய்திகள்
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 386 ஆக குறைந்தது
சுகாதாரத்துறையினர் நேற்று வெளியிட்டுள்ள பட்டியல் படி ஈரோட்டில் மேலும் 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு:
சுகாதாரத்துறையினர் நேற்று வெளியிட்டுள்ள பட்டியல் படி ஈரோட்டில் மேலும் 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்றால் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் தினசரி பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வந்தது.
இதையடுத்து மாவட்ட நிர்வாகம் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தது. இதன் படி ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தினசரி பரிசோதனை அதிகரிக்கப்பட்டது.
இதனால் பாதிப்பு ஏற்பட்டவர்கள் உடனுக்குடன் கண்ட றியப்பட்டு அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப் பட்டது.
இதன் பயனாக கடந்த சில நாட்களாகவே தினசரி பாதிப்பு ஏறிய வேகத்தில் குறைந்து வருகிறது. நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மேலும் 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 589 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் பாதிப்பிலிருந்து 69 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை மாவட்டத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 31 ஆயிரத்து 465 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தற்போது மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கொரோனா பாதிப்புடன் 386 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.