உள்ளூர் செய்திகள்
சாத்தூர் அருகே அழுகிய நிலையில் ஆண்பிணம் கிடந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள எம்.சுப்பையாபுரம் பகுதியில் அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் உடல், மண்டைஓடு, எலும்புக்கூடு கிடப்பதாக பெத்துரெட்டியபட்டி கிராம நிர்வாக அதிகாரி மதன்குமாருக்கு தகவல் கிடைத்தன.
அவர் சாத்தூர் போலீசுக்கு இது தொடர்பாக புகார் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த சாத்தூர் போலீசார் அங்கு கிடந்த மண்டை ஓடுகள், எலும்புக்கூடுகளை சேகரித்து தடயவியல் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் அதன் அருகில் கிடந்த பொருட்களையும் சேகரித்தனர். இறந்து கிடந்தவர் 50 வயது மதிக்கத்தக்க ஆணாக இருக்கலாம் என தெரிகிறது.
அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது கொலை செய்து உடலை வீசி விட்டுச்சென்றார்களா? என்ற கோணத்தில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.