உள்ளூர் செய்திகள்
சின்னாறு அணையில் மூழ்கி மீன் பிடி தொழிலாளி சாவு
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சின்னாறு அணையில் மூழ்கி மீன் பிடி தொழிலாளி பலியானார்.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே போகிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி (வயது 60). மீன்பிடி தொழிலாளி.
இவர் நேற்று இரவில் சின்னாறு அணையில் மீன் பிடிப்பதற்காக சென்றார். அப்போது லாரி டியூப்பில் ஏறி நீரில் சென்று மீன்களை பிடித்து கொண்டிருந்தார்.
இதில் திடீரென அவர் தண்ணீரில் மூழ்கினார். நீச்சல் தெரியாததால் துரைசாமி, தண்ணீரில் மூழ்கி பலியானார்.
இந்த நிலையில் காலை வரை துரைசாமி, வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து துரைசாமி, சின்னாறு அணையில் மூழ்கி பலியானது தெரிய வந்தது.
பின்னர் சூளகிரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் பரிசலில் மூலம் சென்று துரைசாமி உடலை மீட்டனர்.
இதுகுறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் துரைசாமி உடலை பிரேத பரிசோதனைக்காக சூளகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மீன்பிடி தொழிலாளி, சின்னாறு அணையில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.