உள்ளூர் செய்திகள்
தீ விபத்தில் சேதமான லாரியில் இருந்த அட்டைகளை சாலையோரத்தில் வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

ஓடும் லாரியில் தீ விபத்து டிரைவர் உயிர் தப்பினார்

Published On 2022-02-27 16:13 IST   |   Update On 2022-02-27 16:13:00 IST
சூளகிரி அருகே இன்று ஓடும் லாரியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் டிரைவர் உயிர் தப்பினார்.
சூளகிரி:
ஒசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில்  சூளகிரி அருகே கோபசந்திரம் என்ற இடத்தில் இன்று அதிகாலை 4-. 30 மணி அளவில் அட்டை பாரம் ஏற்றிய லாரி சென்று கொண்டிருந்தது.  

லாரியை கர்நாடகா மாநிலம் ரேச்சூர் சேர்ந்த பங்காளியப்பா (வயது 55) என்பவர் ஓட்டி வந்தார்.

அப்போது திடீரென ஓடும் லாரியில் தீப்பிடித்தது. தீ குபுகுபு என்று பிடித்து புகையுடன் வந்ததால் சாலையில் வாகனங்களில் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

உடனே டிரைவர் பங்காளியப்பாவிடம் தெரிவித்தார்.

இதை அறிந்த அவர் லாரியை சாலையோரமாக நிறுத்தினார். பின்னர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.

 அதன் பேரில் விரைந்துதீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இருப்பினும் லாரியில் இருந்த அட்டைகள் பாதிக்கு மேல் எரிந்து சேதமானது. 

இதுகுறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News