உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

வடமாநில கர்ப்பிணி பெண் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2022-02-27 12:35 IST   |   Update On 2022-02-27 12:35:00 IST
கொடுமுடி அருகே வடமாநில கர்ப்பிணி பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடுமுடி:

கொடுமுடி அருகே வடமாநில கர்ப்பிணி பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்தரபிரதேச மாநிலம் தானாருரா பகுதியை சேர்ந்தவர் அணீஸ் வர்மா கடந்த 3 வருடமாக ஈரோடு மாவட்டம் கொடுமுடி-கரூர் பைபாஸ் ரோடு நத்தமேடு என்னுமிடத்தில் மாமா நந்துவர்மா, அவரது தம்பி தீபக் வர்மா, அவரது அத்தை மகன் அஜய் வர்மா ஆகியோர் ஒரே வீட்டில் குடியிருந்து பானிபூரி வியாபாரம் செய்து வருகின்றனர்.

அனீஸ் வர்மாவின் அக்கா திக்சா வர்மாவுக்கும், நந்துவர் மாவுக்கும் திருமணம் நடந்தது. 

இதையடுத்து அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் கொடு முடியில் அருகே உள்ள நத்தமேட்டில் வாடகை வீட்டில் தங்கி இருந்தனர். 

திக்சா வர்மா கர்ப்பமாக இருந்தார். இந்நிலையில் கணவன்&மனைவிக்கு இடையே சிறு, சிறு தகராறு இருந்து வந்தது.

சம்பவத்தன்று நந்து வர்மா கொடுமுடிக்கு பானிபூரி வியாபாரத் துக்காக சென்று விட்டார். வீட்டில் திக்சா வர்மா மட்டும் இருந்துள்ளார். 

வியாபாரத்தை முடித்துக் கொண்டு இரவு நந்து வர்மா வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் உள் அறையில் திக்சா வர்மா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து கொடுமுடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து திக்சா வர்மா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

 இதுகுறித்து  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News