உள்ளூர் செய்திகள்
.

9ம் வகுப்பு மாணவியை கடத்திய வாலிபர்

Published On 2022-02-26 15:57 IST   |   Update On 2022-02-26 15:57:00 IST
கிருஷ்ணகிரியில் 9ம் வகுப்பு மாணவியை கடத்திய வாலிபரை தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி பழைய பேட்டை பகுதியை சேர்ந்த 14 வயதுடைய மாணவி, 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 23ந் தேதி பள்ளிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற மாணவி, அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் , பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் காணவில்லை.

இதைத்தொடர்ந்து மாணவியின் தாய் நாகமணி, கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகளை, அதே பகுதியை சேர்ந்த வாலிபர் சுரேஷ் (20) என்பவர் கடத்தி சென்று விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதுபற்றி மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை போலீசார் தேடி வருகிறார்கள்.

Similar News