உள்ளூர் செய்திகள்
.

கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் கருவூல அலுவலர் மாரடைப்பால் சாவு

Published On 2022-02-26 15:32 IST   |   Update On 2022-02-26 15:32:00 IST
கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் கருவூல அலுவலர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சிங்காரவேலு (வயது 47). இவர் கருவூலத்தில் உதவி அலுவலராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் நேற்று இவர் கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் நின்றிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், வரும் வழியிலேயே சிங்காரவேலு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றி கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் சப்& இன்ஸ்பெக்டர் சிவசந்தர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News