உள்ளூர் செய்திகள்
மத்திய-மாநில அரசுகளை கண்டித்து மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி:
இந்திய மாதர் தேசிய சம்மேளனம், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக நிர்வாகிகள் இணைந்து சின்னமணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர்கள் தசரதா, இளவரசி, மல்லிகா தலைமை வகித்தனர். லதா, மாரிமுத்து மீனாட்சி முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர்கள் சரளா, சத்தியா, விஜயா கண்டன உரையாற்றினர்.
இதில் நிர்வாகிகள் ஆனந்தவள்ளி, சரோஜா, பழனியம்மாள், முத்துலட்சுமி, முனியம்மாள், பெரியநாயகி, அமிர்தவள்ளி, சங்கரி, விசாலாட்சி, ஜெயசீத்தா, விஜயா, லட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மத்திய&மாநில அரசுகள் ஆடையை காரணம் காட்டி இஸ்லாமிய மாணவிகளை பள்ளி, கல்லூரிகளில் இருந்து வெளியேற்றம் செய்வதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.