உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள முங்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது34). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரது மனைவி விஜய லட்சுமி (27).
இந்த நிலையில் சிலம்பரசன் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் பல்வேறு மருத்துவமனை களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட சிலம்பரசன் நேற்று வீட்டில் யாரும் இல்லாத மின்விசிறியில் தூக்குபோட்டு செய்து கொண்டார். இதனை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து மத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித் தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக கிடந்த சிலம்பரசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.