உள்ளூர் செய்திகள்
2 வீடுகளில் தீ விபத்து நகை_பணம் எரிந்து சேதம்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே 2 வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் நகை_பணம் எரிந்து சேதமானது.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள வேலம்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சின்ன மாதையன். கூலி தொழிலாளி.
இந்த நிலையில் நேற்று இவர் தனது மனைவியுடன் கூலி வேலைக்கு சென்றி ருந்தார். பிற்பகலில் இவரது குடிசை வீட்டில் இருந்து திடீரென புகை வந்தது. இதையடுத்து சிறிது நேரத்தில் குடிசை தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்குள்ள மக்கள் ஓடி வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் தீ மளமளவென பரவியது.
மேலும் அருகில் வசித்த சத்யராஜ் என்பது வீட்டிலும் தீ பரவியது.
நகை-பணம் நாசம்
இந்த தீ விபத்தில் சின்ன மாதையன் வீட்டில் இருந்த 4 பவுன் நகை ,ரூ.70 ஆயிரம் பணம் மற்றும் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் எரிந்து சாம்பலானது. இதேபோல் சத்யராஜ் வீட்டில் இருந்த அனைத்து தொடக்கம் தீயில் எரிந்து சேதமானது.
இந்த தீ விபத்து குறித்து நாகரசம் பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின் றனர். முதல் கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட் டதாக கூறப் படுகிறது.
அடுத்தடுத்து இரண்டு வீடு களில் தீப்பிடித்து நகை பணம் சேதமான சம்பவம் அப்ப குதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது