உள்ளூர் செய்திகள்
வழக்கு

ஆலை உரிமையாளர், போர்மேன் மீது வழக்கு

Published On 2022-02-24 15:57 IST   |   Update On 2022-02-24 15:57:00 IST
பட்டாசு விபத்தில் ஆலை உரிமையாளர், போர்மேன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர்

சிவகாசி அருகே உள்ள ஜமீன்சல்வார்பட்டியில் ரவீந்திரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. 

நேற்று இங்கு நடந்த வெடி விபத்தில் வேலைபார்த்து கொண்டிருந்த கீழபெத்துலுபட்டியை சேர்ந்த கதிர்வேல் என்பவர் படுகாயம் அடைந்து தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இதுகுறித்து அவரது மனைவி அமிர்தம் கொடுத்த புகாரின்பேரில்  பட்டாசு ஆலை உரிமையாளர் ரவீந்திரன், போர்மேன் அய்யனார் ஆகியோர் மீது சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Similar News