உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே 2 நர்சிங் மாணவிகள் மாயமானார்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே கக்கதாசத்தை சேர்ந்த முத்துராஜ். இவரது மகள் சசிகலா (வயது22). இவர் குருபரபள்ளியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 4 ஆம் ஆண்டு படித்து வந்தார்.
மேலும், ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சிக்காக வந்து சென்றவர், கடந்த 21-ந்தேதி அன்று வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங் களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து முத்துராஜ் ஓசூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான சசிகலாவை தேடி வருகின்றனர்.
இதே போல் ஓசூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் ராதா கிருஷ்ணன். இவரது மகள் மகேஸ்வரி (20). இவர் நர்சிங் முடித்துவிட்டு, ஓசூர் ஏரித்தெருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த 23-ந் தேதி வேலைக்கு சென்ற அவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து ராதா கிருஷ்ணன் ஓசூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மகேஸ்வரிவை தேடி வருகின்றனர்.