உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரியில் தி.மு.க. முகவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி கோட்டை பகுதியை சேர்ந்தவர் பயாஸ்(40). இவர் நேற்று நகராட்சி வாக்குகள் எண்ணும் மையத்தில், வார்டு எண்1-ல் திமுக முகவராக செயல்பட்டார்.
நகராட்சியில் தி.மு.க அதிக இடங்களை கைப்பற்றியதால், வாக்கு எண்ணும் மையத்திற்கு முன்பு திமுகவினர் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பயாஸ் திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக, மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், பயாஸ் மாரடைப்பால் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் தி.மு.க.வினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.