உள்ளூர் செய்திகள்
.

மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி

Published On 2022-02-22 15:55 IST   |   Update On 2022-02-22 15:55:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி பலியானார்.
ஓசூர்:

தேன்கனிக்கோட்டை தாலுகா கல்லு பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது21).  கூலித்தொழிலாளி. 

இவர் ஓசூரில் எம்ஜி சாலையில் உள்ள தனியார் மருத்து வமனை அருகில் டிராக்டர் ட்ரெய்லரில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். ஜெனரேட்டர் உடன் பொருத்தப்பட்டிருந்த அந்த ட்ராக்டர் டிரைலரில் எதிர்பாராதவிதமாக விஜயகுமாரை மின்சாரம் தாக்கியது.

இதில் விஜயகுமார் சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி பலியானார். இதுகுறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News