உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே குடும்ப தகராறில் மனைவியை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள சின்ன பர்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவி (வயது35). இவருக்கும் சந்தோஷ் என்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக தேவியை சந்தோஷ் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தேவி பர்கூர் போலீசில் புகார் செய்தார் அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோசை கைது செய்தனர்.