உள்ளூர் செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விற்பனை பிரதிநிதி மாயமானார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
-ஸ்ரீவில்லிபுத்தூர் கூனங்குளம் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார்(வயது23). தனியார் விற்பனை பிரதிநிதியாக உள்ளார். நேற்று முன்தினம் இவரும், அண்ணன் மதன்குமாரும் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள புனித இருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டு போட்டுவிட்டு வந்தனர்.
அதன்பிறகு முத்துக்குமார் மாயமாகிவிட்டார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து சகோதரர் மதன்குமார் கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.