உள்ளூர் செய்திகள்
வாலிபர் பலி

விபத்தில் வாலிபர் சாவு

Published On 2022-02-20 15:48 IST   |   Update On 2022-02-20 15:48:00 IST
சிவகாசி அருகே லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.
சிவகாசி

சிவகாசி அருகே உள்ள கங்கரகோட்டை ஊராட்சி கீழசெல்லையாபுரத்தை சேர்ந்த லட்சுமணன் மகன் ஆனந்தராஜ்(வயது 38). இவர் இருசக்கர வாகனத்தில் ஏழாயிரம் பண்ணைக்கு சென்றபோது மேட்டூரில் இருந்து வந்த லாரி  மோதியது. 

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஆனந்தராஜை விருதுநகர் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து அவரது மனைவி ராஜலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் ஏழாயிரம் பண்ணை  போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.  

லாரி டிரைவர் நடுசுரங்குடியை சேர்ந்த கருப்பசாமியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News