உள்ளூர் செய்திகள்
சிவகாசி அருகே தொழிலாளி வீட்டில் 8 பவுன் நகையை திருடியவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
விருதுநகர்
சிவகாசி அருகே உள்ள சாமிநத்தம் பகுதியை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி பஞ்சவர்ணம் வயது40). கணவர் இறந்துவிட்ட நிலையில் தனியாக வசித்த இவர் பட்டாசு ஆலையில் வேலைபார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று பஞ்சவர்ணம் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிவந்தார். அப்போது அவரது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகைகள் திருட்டு போயிருந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் மல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.