உள்ளூர் செய்திகள்
தற்கொலை முயற்சி

தொழிலாளி தற்கொலை முயற்சி

Published On 2022-02-20 15:36 IST   |   Update On 2022-02-20 15:36:00 IST
சிவகாசி அருகே மனைவி மற்றும் மகனை பிளேடால் வெட்டிவிட்டு தொழிலாளி தற்கொலைக்கு முயன்றார்.
விருதுநகர்

சிவகாசி அருகே உள்ள புதுக்கோட்டையை சேர்ந்தவர் பால்பாண்டி(வயது 37). இவரது மனைவி கண்ணகி(30). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். பால்பாண்டி அடிக்கடி மது குடித்து வந்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. 

இதனால் கண்ணகி தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். அதன் பிறகு உறவினர்கள் சமரசம் செய்து இருவரையும் சேர்த்து வைத்தனர். இதனைத்தொடர்ந்து கண்ணகி கணவர் மற்றும் மகனுடன் சேர்ந்து வாழ்ந்தார்.

இந்தநிலையில் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த பால்பாண்டி பிளேடால் மனைவி மற்றும் மகனை வெட்டினார். பின்னர் அவரும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.

இதுகுறித்த எம்.புதுப்பட்டி போலீசில் கண்ணகி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பால்பாண்டியை கைது செய்தனர்.

Similar News