உள்ளூர் செய்திகள்
தி.மு.க. வேட்பாளரை தாக்கி கொலை மிரட்டல்
தி.மு.க. வேட்பாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த அ.தி.மு.க. வேட்பாளர் உள்பட 10 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 19&வது வார்டில் தி.மு.க. வேட்பாளராக செந்தில்குமார் என்ற ராஜா போட்டியிடுகிறார்.
இவர் நேற்று தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு அ.தி.மு.க. வேட்பாளர் முருகேசன் மற்றும் சிலர் வந்தனர்.
அவர்கள் தன்னை கட்டையால் தாக்கி படுகாயப்படுத்தியதோடு கொலை மிரட்டலும் விடுத்ததாக ராஜபாளையம் வடக்கு போலீசில் செந்தில்குமார் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி அ.தி.மு.க. வேட்பாளர் முருகேசன், அமிர்தம், ஜெயராம், சண்முகசுந்தரம், மாரிஸ், ஆறுமுகபாலாஜி உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.