உள்ளூர் செய்திகள்
புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் தற்கொலை
ராஜபாளையம் அருகே புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
விருதுநகர்
வத்திராயிருப்பு ராமசாமிபுரத்தை சேர்ந்தவர் சின்னஓட்டக்காரன் என்ற குமார்(வயது 32). இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. சம்பவத்தன்று குமார் மதுகுடிக்க தனது தாயரிடம் பணம் கேட்டுள்ளார்.
ஆனால் அவர் பணம் தர மறுத்ததோடு கண்டித்துள்ளார். இதில் விரக்தியடைந்த குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். கூமாபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டியை சேர்ந்தவர் அய்யனார்(21). ஒர்க்ஷாப்பில் வேலைபார்த்து வந்த இவர் சில நாட்களாக வேலைக்கு செல்லவில்லை. இதனை குடும்பத்தினர் கண்டித்தனர்.
இதில் விரக்தியடைந்த அய்யனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அவரது தந்தை முருகன் கொடுத்த புகாரின் பேரில் ராஜபாளையம் வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.