உள்ளூர் செய்திகள்
பக்தர்கள் ஊர்வலமாக வந்த காட்சி.

மாரியம்மன் கோவில் திருவிழா

Published On 2022-02-17 16:21 IST   |   Update On 2022-02-17 16:21:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி அருகே மாரியம்மன் திருவிழா நடைபெற்றது.
மத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி அருகே உள்ள ஆவத்துவாடி  கிராமத்தில் மாரியம்மன் திருவிழா வெகு சிறப்பாக நேற்று மாலை நடைபெற்றது. 

இந்த விழாவில் கிராம மக்கள் மாவிளக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்று மாரியம்மன் கோவில் முன்பு  பக்தர்கள் ஈரத்துணியுடன் தரையில் உருளு தண்டம் விழும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

இந்த நிகழ்ச்சியில் மாரியம்மன் கோயில் பூசாரி தலையில் வைத்தபடி அருள் வந்து பக்தர்களை  மிதித்து மற்றும் குதிரைக்கு கொள்ளு ஊட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள், விழா குழுவினர் கள் மற்றும் இளைஞர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்தனர். இதில் ஏராளமான  பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News