உள்ளூர் செய்திகள்
.

தென்பெண்ணை ஆற்றில் இறந்து கிடந்த பெண்

Published On 2022-02-17 16:05 IST   |   Update On 2022-02-17 16:05:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே தென்பெண்ணை ஆற்றில் இறந்து கிடந்த பெண் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சூளகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே கோபசந்திரம் தென்பெண்ணை ஆற்றில் 50 வயது வயது மதிக்கத்தக்க பெண் சடலம் மிதந்தது. இதனை பார்த்து அங்கு சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

உடனே இதுபற்றி சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். ஆற்றில் இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்-? என்பது தெரியவில்லை.  பின்னர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News