உள்ளூர் செய்திகள்
டேனிஷ் கோட்டை- கடற்கரையில் குவிந்துள்ள சுற்றுலா பயணிகள்.

தரங்கம்பாடி டேனிஷ் கோட்டைக்கு மீண்டும் சுற்றுலா பயணிகள் வருகை

Published On 2022-02-15 10:11 IST   |   Update On 2022-02-15 10:11:00 IST
ஊரடங்கால் முடங்கிப்போன தரங்கம்பாடி டேனிஷ் கோட்டைக்கு மீண்டும் சுற்றுலா பயணிகள் வருவதால் புத்துயிர் பெற்றது.
தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை மற்றும் கடற்கரைப் பகுதியில் விடுமுறை நாட்கள் என்று பாராமல் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துவருகிறது.

தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையை பார்வையிட ஏராளமான சுற்றுலா பயணிகள் கொரோனா பொது முடக்கம் தளர்வுகளுக்கு பிறகு ஏராளமானவர்கள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். 

கி.பி 1620-ம் ஆண்டு டென்மார்க் நாட்டினர் தரங்கம்பாடியை, இந்தியாவில் தங்களது வர்த்தக மையமாக அமைக்க முடிவு செய்தவுடன், அப்போது தஞ்சையை ஆண்ட விஜயரகுநாத நாயக்கரிடம், தரங்கம்பாடியில் ஒரு துறைமுகத்தையும், டேனிஷ் கலை நுணுக்கதுடன் ஒரு பாதுகாப்பு கோட்டையையும் அமைக்க அனுமதி பெற்றனர். 

2 ஆண்டு காலத்திற்குள் கி.பி. 1622-ல் கட்டி முடிக்கப்பட்ட அந்த பிரமாண்ட கோட்டை இந்தியாவில் டேனிஷ் வர்த்தக மையத்தின் தலைமை இருப்பிடமாக அமைந்தது.

400 ஆண்டுகள் பழமையாகியும் இன்றும் கம்பீரமாய் காட்சியளிக்கும் இக்கோட்டையில் செயல்படும் அகழ்வைப்பகத்தில் 14,15,16 ஆம் நூற்றாண்டுகளில் டேனிஷ்காரர்கள், தமிழர்கள் பயன்டுத்திய பொருட்கள், 1200-ம் ஆண்டுகால சிலைகள், பீங்கான், மரத்தாலான பழமையான பொருட்கள், டேனிஷ் அரசர்கள், ஆளுநர்களின் புகைப்படங்கள், டேனிஷ்கால பத்திரங்கள், போர்கருவிகள், 16 ஆம் நூற்றாண்டில் தரங்கம்பாடி வந்த கப்பல் ஒன்றின் உடைந்த பாகங்கள், என ஏராளமான வரலாற்று சின்னங்களை பத்திரப்படுத்தி காட்சிக்கு வைத்துள்ளனர்.

மேலும் கோட்டையின் தரைத்தளத்தில் சிறைச்சாலை, ஓய்வறைகள், பண்டகவைப்பறை, பீர், ஒயின் கிடங்கு அறைகளாக டேனிஷ்காலத்தில் பயன்படுத்தப்பட்ட அறைகளை பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையை பார்வையிட விடுமுறை நாள்கள் என பாராமல் நாள்தோரும் ஆயிரக்கணக்கானோர், தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்து டேனிஷ் கோட்டை மற்றும் கடற்கரைப்பகுதியில் பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் கடற்கரையில் குளித்து விளையாடி மகிழ்ந்து செல்கின்றனர். 

இங்கே அபுர்வ காற்றான ஓசன் காற்று காலை, மாலை, என வந்து செல்வதால் சிறப்பு அம்சத்தை பெற்றது. இந்ந தரங்கம்பாடி கடற்கரை என்பது குறிப்பிடதக்கது.

Similar News