உள்ளூர் செய்திகள்
திமுக வேட்பாளர் பாபு பிரசாரம்

189-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் பாபு பெண்களிடம் ஆதரவு திரட்டினார்

Published On 2022-02-13 15:59 IST   |   Update On 2022-02-13 16:08:00 IST
பள்ளிக்கரணை 189-வது வார்டில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் வ.பாபு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்து வருகிறார்.

சோழிங்கநல்லூர்:

பள்ளிக்கரணை 189-வது வார்டில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் வ.பாபு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்து வருகிறார். ராஜேஷ் நகர் பகுதியில் வேட்பாளர் வ.பாபு மளிகை கடைக்கு சென்று இளைஞர்களிடம் தி.மு.க. அரசின் சாதனை களை விளக்கும் துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார். வீடு வீடாகச் சென்று பொது மக்கள் முதியவர், பெண்கள், இளைஞர்களிடம் உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து உங்கள் உங்களில் ஒருவராக நினைத்து வார்டு உறுப்பினராக வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அந்த பகுதி மக்கள் அவருக்கு மாலை அணிவித்து ஆர்த்தி எடுத்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அவருடன் மாவட்ட, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் சென்று வாக்கு சேகரித்தனர்.

Similar News