உள்ளூர் செய்திகள்
குடியாத்தம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெறும் பணிகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.

குடியாத்தம் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

Published On 2022-02-13 15:43 IST   |   Update On 2022-02-13 15:43:00 IST
குடியாத்தம் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

குடியாத்தம்

குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் பல்வேறு பணிகளை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

குடியாத்தம் ஒன்றியத்தில் பாரதப்பிரதமர் சாலைகள் மேம்பாடு திட்டத்தின் மேல்ஆலத்தூர்&நத்தம் கூட்ரோடிலிருந்து ஒலக்காசி செல்லும் சாலை, எர்த்தாங்கல் கிராமத்திலிருந்து அக்ராவரம் செல்லும் சாலை, அக்ராவரம் கிராமத்தில் இருந்து பூங்குளம் செல்லும் சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது இந்த பணிகளை ஆய்வு செய்தார்.

மேல்ஆலத்தூர் ஊராட்சி பட்டு-நத்தமேடு இணைப்பு பாலம் வெள்ளப்பெருக்கால் அடித்துச் செல்லப்பட்டது தற்போது அமைக்கப்பட்டு வரும் தற்காலிக பாலத்தை ஆய்வு செய்தார்.

மேல்ஆலத்தூர் ஊராட்சியில் அமைக்கப்பட்டுவரும் பண்ணைகுட்டை, மாட்டுக் கொட்டகை ஆய்வு செய்தார்.தொடர்ந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் நடைபெறும் கால்வாய் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார், தொடர்ந்து குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது உதவி கலெக்டர் தனஞ்செயன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் செந்தில்வேல், ஊரக வளர்ச்சி உதவி செயற்பொறியாளர் மஞ்சுநாதன், உதவி திட்ட அலுவலர் வசுமதி, தாசில்தார் லலிதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எஸ்.யுவராஜ், எஸ்.சுமதி, ஒன்றிய உதவி செயற்பொறியாளர்கள் குகன், புவியரசன், மேல்ஆலத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சுஜாதாராஜ்குமார், துணைத்தலைவர் ராஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Similar News