உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

திருக்கோவிலூர் அருகே பறக்கும் படை சோதனை- நிதி நிறுவன ஊழியரிடம் பணம் பறிமுதல்

Published On 2022-02-11 11:32 GMT   |   Update On 2022-02-11 11:32 GMT
திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
திருக்கோவிலூர்:

திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டையில் ரிஷிவந்தியம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தினகர்பாபு தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது திருவண்ணாமலை நிதி நிறுவனத்தில் பணிபுரியும் திருவண்ணாமலை இனாம் காரியந்தல் பகுதியைச் சேர்ந்த அருள் (வயது 34) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி பறக்கும் படையைச் சேர்ந்த ஏட்டு செந்தில்குமார் மற்றும் சுகுமார், சுதாகர் ஆகியோர் சோதனை செய்தனர்.

 அப்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் 63 ஆயிரத்து 200 ரூபாய் இருப்பது கண்டு அவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை மணலூர்பேட்டை பேரூராட்சி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் ஸ்டாலினிடம் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News