உள்ளூர் செய்திகள்
உறுதிமொழி ஏற்ற பள்ளி மாணவிகள்.

பாலியல் வன்முறைக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு

Published On 2022-02-10 14:31 IST   |   Update On 2022-02-10 14:31:00 IST
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அரசு பள்ளியில் பாலியல் வன்முறைக்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற மாணவர் மனசு பெட்டி திறப்பு விழாவில், மாணவ&மாணவிகள் பாலியல் வன்முறைக்கு எதிரான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 

பள்ளிகளில் மாணவிகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்முறைகளை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 

இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் மாணவிகள் தங்களது குறைகளை தெரிவிப்பதற்காக “மாணவர் மனசு” என்ற பெட்டியை அமைக்கவும், இது குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அமைக்கவும் உத்தரவிட்டது.

அதன்படி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மேலாண்மைக்குழு தலைவி ஆனந்தஜோதி முன்னிலையில், தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ், மாணவர் மனசு பெட்டியை திறந்துவைத்தார். 

பின்னர் அனைவரும் பாலியல் வன்முறைகளுக்கு எதிரான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஆசிரியைகள் ரோஸ்லினாராஜ்,  சிவகாமி, “இல்லம் தேடி கல்வி” திட்ட தன்னார்வலர்கள் வசந்தி, காயத்திரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


Similar News