உள்ளூர் செய்திகள்
இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்

Published On 2022-02-10 14:25 IST   |   Update On 2022-02-10 14:25:00 IST
விருதுநகர் அருகே திருமணமான இளம்பெண் மாயமானார்.
விருதுநகர்

விருதுநகர் அருகே உள்ள பட்டம்புதூர் வ.உ.சி.நகரை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ். இவரது மனைவி சங்கீதா (வயது 21). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகின்றன. இந்த தம்பதியருக்கு குழந்தை இல்லாததால் கணவன்&மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. 

கடந்த 10 நாட்களுக்கு முன்பு சங்கீதாவை அவரது தந்தை  கல்லூரணியை சேர்ந்த அன்புதம்பி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அதன்பிறகு மகளை கணவர் வீட்டில் அவர் விட்டுச்சென்றார். இந்தநிலையில் வீட்டில் இருந்த சங்கீதா திடீரென மாயமாகிவிட்டதாக  சுபாஷ்சந்திரபோஸ் போன் மூலம் அன்புதம்பிக்கு தகவல் கொடுத்தார். 

அவர் மகளை பல்வேறு இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.  இதுகுறித்து வச்சக்காரப்பட்டி போலீசில் அன்பு தம்பி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி ஈஸ்வரன் காலனியை சேர்ந்த ராமலட்சுமி மகள் மாரியம்மாள்(16) மாயமாகிவிட்டதாக மாரனேரி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News