உள்ளூர் செய்திகள்
தற்கொலை

கல்லூரி மாணவிகள் 2பேர் தற்கொலை

Published On 2022-02-09 16:42 IST   |   Update On 2022-02-09 16:42:00 IST
செல்போன் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவிகள் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பெருமாள்பட்டியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மகள் சுகந்தி(வயது 18). கல்லூரி மாணவியான இவர் தற்போது விடுமுறை  என்பதால் வீட்டில் இருந்து வந்தார். அப்போது அடிக்கடி செல்போன் பார்த்துக் கொண்டிருந்தார். 

இதனை சுகந்தியின் தாயார் கண்டித்தார். இதனால் மனவேதனையடைந்த சுகந்தி விஷம் குடித்து மயங் கினார். அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி சுகந்தி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் ரெங்கநாதபுரத்தை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மகள் சந்தனமாரி(19) சிவகாசியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் வீட்டில் இருந்தபோது செல்போன் பார்த்ததை பெற்றோர் கண்டித்துள்ளனர்.

இதனால் மனவேதனையடைந்த சந்தனமாரி திடீரென மாயமாகி விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் தகவல் கிடைக்கவில்லை. இந்தநிலையில் அந்தபகுதியில் உள்ள பரமன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் சந்தனமாரி பிணமாக மிதப்பதாக தகவல் கிடைத்தது.

இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் விரைந்துவந்து சந்தானலட்சுமி உடலை மீட்டனர். அவரது தாயார் மாரியம்மாள் புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

செல்போன் பார்த்ததை பெற்றோர் கண்டித்ததால் மனவேதனை அடைந்த சந்தனமாரி கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

Similar News